அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைநம்பிக்கையாளர்களின் உயிர்கள் சமமானவை. அவர்கள் பிறருக்கு எதிராக ஒரே அணியினர் ஆவார்கள். அவர்களில் சாதாரணமானவர் வழங்கும் அடைக்கலத்தைக்கூட அவர்கள் அனைவரும் நிறைவேற்றப் பாடுபடுவார்கள். ஆனால், ஓர் இறைமறுப்பாளருக்காக எந்த இறைநம்பிக்கையாளரும் கொல்லப்பட மாட்டார். அவ்வாறே, உடன்படிக்கை செய்தவரும், அவரது உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் வரை கொல்லப்பட மாட்டார்."