ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டார். அப்போது அவர்கள், 'அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் யார் பேசுவது?' என்று கேட்டார்கள். அவரிடம் பேச எவருக்கும் துணிவு வரவில்லை; எனவே உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அவரிடம் பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பனூ இஸ்ராயீல்கள், தங்களில் கண்ணியமிக்கவர் ஒருவர் திருடினால் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். ஆனால் பலவீனமானவர் திருடினால் அவரது கையை வெட்டிவிடுவார்கள். ஃபாத்திமாவே திருடியிருந்தாலும் நான் அவரது கையை வெட்டியிருப்பேன்.'"