அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ரா அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ பக்ரா (ரழி) அவர்கள், ஸிஜிஸ்தானில் இருந்த தம் மகனுக்கு (பின்வருமாறு) எழுதினார்கள்: 'நீங்கள் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையில் தீர்ப்பளிக்காதீர்கள், ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நீதிபதி கோபமான மனநிலையில் இருக்கும்போது இருவருக்கிடையில் தீர்ப்பளிக்கக் கூடாது" என்று கூறக் கேட்டேன்.'
அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
என் தந்தை (அபூ பக்ரா (ரழி) அவர்கள்) உபைதுல்லாஹ் இப்னு அபூ பக்ரா அவர்களுக்கு – அவர் ஸிஜிஸ்தானின் நீதிபதியாக இருந்தபோது – சொல்லச்சொல்ல நான் அவருக்காக எழுதினேன்: 'நீங்கள் கோபமாக இருக்கும்போது இரு நபர்களுக்கிடையில் தீர்ப்பளிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'கோபமாக இருக்கும்போது எவரும் இரு நபர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கக் கூடாது' என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.'
وَعَنْ أَبِي بَكْرَةَ - رضى الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم -يَقُولُ: { لَا يَحْكُمُ أَحَدٌ بَيْنَ اِثْنَيْنِ, وَهُوَ غَضْبَانُ } مُتَّفَقٌ عَلَيْهِ [1] .
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையில் தீர்ப்பளிக்கக் கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.