அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் ஒரு முஸ்லிமின் உரிமையை தனது (பொய்யான) சத்தியத்தின் மூலம் அபகரித்துக் கொண்டாரோ, அவருக்கு அல்லாஹ் நரக நெருப்பைக் கட்டாயமாக்கிவிட்டான்; மேலும் சுவர்க்கத்தை அவருக்குத் தடைசெய்துவிட்டான்."
அப்போது ஒரு மனிதர் அவரிடம், "அல்லாஹ்வின் தூதரே! அது மிக அற்பமான பொருளாக இருந்தாலும் கூடவா?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "(ஆம்) அது 'அராக்' மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் சரியே" என்று பதிலளித்தார்கள்.