அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: "யா அல்லாஹ், நான் உன்னிடம் நான்கு விஷயங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்: பயனளிக்காத கல்வியை விட்டும், பயபக்தியற்ற உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆன்மாவை விட்டும், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனையை விட்டும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மினல் அர்பஇ: மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்ஸின் லா தஷ்பஉ, வ மின் துஆஇன் லா யுஸ்மஉ. அல்லாஹ்வே! நான் உன்னிடம் நான்கு விஷயங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்: பயனளிக்காத கல்வியிலிருந்தும், (உனக்கு) அஞ்சாத உள்ளத்திலிருந்தும், திருப்தியடையாத ஆன்மாவிலிருந்தும், செவியேற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும்.