அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்:
"அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினஷ் ஷிகாகி, வந்நிஃபாகி, வ ஸூவில் அக்லாக்"
பொருள்: "அல்லாஹ்வே! பிளவுபடுவதை (மற்றும் பகைமையை, கருத்து வேறுபாடுகளை) விட்டும், நயவஞ்சகத்தனத்தை விட்டும், தீய குணங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்."