அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அல்-அஜ்ஸி, வல்-கஸலி, வல்-புக்லி, வல்-ஜுப்னி, வல்-ஹரமி, வ அதாபில் கப்ரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல்-மமாத் (அல்லாஹ்வே! இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், தள்ளாமை, கப்ரின் வேதனை, வாழ்வின் மற்றும் மரணத்தின் சோதனைகள் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)"