"ஹுமைத் அவர்கள் அறிவித்தார்கள்: 'அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் கப்ரின் வேதனை பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுபவர்களாக இருந்தார்கள்: அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக மினல் கஸலி, வல்ஹரமி, வல்ஜுப்னி, வல்புக்லி, வ ஃபித்னதித் தஜ்ஜாலி, வ அதாபில் கப்ர் (யா அல்லாஹ், நான் உன்னிடம் சோம்பலில் இருந்தும், தள்ளாமையில் இருந்தும், கோழைத்தனத்தில் இருந்தும், கஞ்சத்தனத்தில் இருந்தும், தஜ்ஜாலின் சோதனையில் இருந்தும், கப்ரின் வேதனையில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.)'"
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைக் கூறி பாதுகாப்புத் தேடுவார்கள்: 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்-கஸலி, வல்-ஹரமி, வல்-ஜுப்னி, வல்-புக்லி, வ ஸூஇல்-கிபரி, வ ஃபித்னதித்-தஜ்ஜாலி, வ அதாபில்-கப்ரி (அல்லாஹ்வே, நான் உன்னிடம் சோம்பல், தள்ளாமை, கோழைத்தனம், கஞ்சத்தனம், மோசமான முதுமை, தஜ்ஜாலின் சோதனை மற்றும் கப்ருடைய வேதனை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.)'"