இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2002ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنْ عُمَارَةَ بْنِ،
غَزِيَّةَ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، قَدِمَ مِنْ جَيْشَانَ - وَجَيْشَانُ مِنَ الْيَمَنِ - فَسَأَلَ
النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَوَمُسْكِرٌ هُوَ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم ‏"‏ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ
طِينَةِ الْخَبَالِ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ ‏"‏ عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ
أَهْلِ النَّارِ ‏"‏ ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
யமன் நாட்டில் உள்ள ஜைஷான் எனும் பகுதியிலிருந்து (மதீனாவிற்கு) வந்த ஒரு மனிதர், தம்முடைய நாட்டில் தினையிலிருந்து தயாரிக்கப்பட்டு ‘மிஸ்ர்’ என அழைக்கப்படும் ஒரு பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், “அது போதையேற்படுத்தக் கூடியதா?” என்று கேட்டார்கள்.

அவர், “ஆம்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “போதையேற்படுத்தும் ஒவ்வொன்றும் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆகும். நிச்சயமாக, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது. (அதாவது,) எவர் போதைப்பொருளை அருந்துகிறாரோ அவருக்கு அவன் ‘தீனத்துல் கபால்’லிருந்து புகட்டுவான்.”

(அங்கிருந்தவர்கள்) “அல்லாஹ்வின் தூதரே! ‘தீனத்துல் கபால்’ என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “(அது) நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் கசிவு” என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح