ஸிர்ர் அறிவித்தார்கள்:
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: "விதையைப் பிளந்து உயிரினத்தைப் படைத்தவன் மீது சத்தியமாக! 'என்னை ஒரு முஃமின் மட்டுமே நேசிப்பார்; என் மீது ஒரு நயவஞ்சகன் மட்டுமே வெறுப்புக் கொள்வான்' என்பது எழுதப்படிக்கத் தெரியாத நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அளித்த வாக்குறுதியாகும் (அல்லது உறுதிமொழியாகும்)."