حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ " لاَ حَرَجَ ". قَالَ آخَرُ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ " لاَ حَرَجَ ". قَالَ آخَرُ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ " لاَ حَرَجَ ".
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "நான் (ஜம்ராவில்) கல்லெறிவதற்கு முன்பே (கஃபாவைச் சுற்றிவரும் தவாஃபுல் இஃபாதா) செய்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அதில்) குற்றமில்லை" என்று கூறினார்கள். மற்றொருவர், "நான் (குர்பானிப் பிராணியை) அறுப்பதற்கு முன்பே (தலையை) மழித்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அதில்) குற்றமில்லை" என்று கூறினார்கள். மற்றொருவர், "நான் (ஜம்ராவில்) கல்லெறிவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அதில்) குற்றமில்லை" என்று கூறினார்கள்.