இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4412ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ،‏.‏ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، أَقْبَلَ يَسِيرُ عَلَى حِمَارٍ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ يُصَلِّي بِالنَّاسِ، فَسَارَ الْحِمَارُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، ثُمَّ نَزَلَ عَنْهُ، فَصَفَّ مَعَ النَّاسِ‏.‏
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாஇன் போது மினாவில் மக்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவர் (அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி)) ஒரு கழுதையின் மீது சவாரி செய்து வந்தார்.
(தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களின்) வரிசையின் ஒரு பகுதிக்கு முன்னால் அந்தக் கழுதை கடந்து சென்றது.
பின்னர் அவர் (கழுதையில் இருந்து) இறங்கி, மக்களுடன் (சேர்ந்து) வரிசையில் நின்றார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
504 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، أَقْبَلَ يَسِيرُ عَلَى حِمَارٍ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ يُصَلِّي بِالنَّاسِ - قَالَ - فَسَارَ الْحِمَارُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ ثُمَّ نَزَلَ عَنْهُ فَصَفَّ مَعَ النَّاسِ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் ஒரு கழுதையின் மீது சவாரி செய்து வந்தேன். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது மினாவில் நின்று மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். (அவர் கூறினார்:) அக்கழுதை ஸஃப்பில் (தொழுகை வரிசையில்) சிலருக்கு முன்பாகச் சென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் ஸஃப்பில் சேர்ந்து கொண்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح