ஸியாத் இப்னு ஜுபைர் அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் வந்து, "நான் ஒரு நாள் நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்திருந்தேன். (நான் நோன்பு நோற்க நேர்ச்சை செய்த) அந்நாள் ஈதுல் அழ்ஹா அல்லது ஈதுல் ஃபித்ர் நாளுடன் ஒத்துப்போனது" என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள், "அல்லாஹ் தஆலா நேர்ச்சையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்பதைத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.