இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2143ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ، وَكَانَ بَيْعًا يَتَبَايَعُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، كَانَ الرَّجُلُ يَبْتَاعُ الْجَزُورَ إِلَى أَنْ تُنْتَجَ النَّاقَةُ، ثُمَّ تُنْتَجُ الَّتِي فِي بَطْنِهَا‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹபல் அல்-ஹபலா' எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். அறியாமைக் காலத்தில் மக்களிடையே இந்த வியாபாரம் வழக்கத்தில் இருந்தது. (அதாவது) ஒருவர் அறுப்பதற்கான ஒட்டகத்தை வாங்குவார்; (அதற்கான விலையை) ஒரு குறிப்பிட்ட ஒட்டகம் குட்டி ஈன்று, பிறகு அதன் வயிற்றில் உள்ள குட்டியும் (வளர்ந்து) ஈன்ற பிறகு தருவதாகத் தவணை குறிப்பிடுவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3843ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَتَبَايَعُونَ لُحُومَ الْجَزُورِ إِلَى حَبَلِ الْحَبَلَةِ، قَالَ وَحَبَلُ الْحَبَلَةِ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا، ثُمَّ تَحْمِلَ الَّتِي نُتِجَتْ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அறியாமைக் காலத்தில் மக்கள் ஒட்டக இறைச்சியை ‘ஹபல் அல்-ஹபலா’ (எனும் காலக்கெடு) வரை வியாபாரம் செய்து வந்தார்கள். ‘ஹபல் அல்-ஹபலா’ என்பது, (சினையாக உள்ள) ஒட்டகம் தன் வயிற்றிலுள்ள குட்டியை ஈன்று, பின்னர் ஈன்றெடுக்கப்பட்ட அக்குட்டி சினைப்படுவதாகும். நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரத்தைத் தடுத்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح