حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ. فَقَالَ لاَ تَدَعُونَ مِنْهَا دِرْهَمًا .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அன்சாரிகளைச் சேர்ந்த சில ஆண்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டு, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரியின் மகனான (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களின் பிணைத்தொகையை (அவருக்குச் சலுகையாக) விட்டுவிட எங்களுக்கு அனுமதியுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதிலிருந்து ஒரு திர்ஹமைக் கூட நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்று பதிலளித்தார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள். அவர்கள், "(பத்ர் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த) எங்கள் சகோதரியின் மகன் அப்பாஸ் (ரழி) அவர்களின் மீட்புத்தொகையை நாங்கள் விட்டுக்கொடுக்க எங்களுக்கு அனுமதியுங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அதிலிருந்து ஒரு திர்ஹமைக் கூட நீங்கள் விட்டுவிட மாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.