இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4366ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ بَعْدَ ثَلاَثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا فِيهِمْ ‏"‏ هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ ‏"‏‏.‏ وَكَانَتْ فِيهِمْ سَبِيَّةٌ عِنْدَ عَائِشَةَ فَقَالَ ‏"‏ أَعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ‏"‏‏.‏ وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ ‏"‏ هَذِهِ صَدَقَاتُ قَوْمٍ، أَوْ قَوْمِي ‏"‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தினரைப் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களை நான் கேட்டதிலிருந்து, நான் அவர்களைத் தொடர்ந்து நேசித்து வருகிறேன்: (அவை:) 'என் உம்மத்தினரில் தஜ்ஜாலுக்கு எதிராக மிகவும் கடுமையானவர்கள் அவர்களே.' ஆயிஷா (ரழி) அவர்களிடம் (அக்குலத்தைச் சேர்ந்த) கைதிப் பெண் ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள், 'இவரை விடுதலை செய்! ஏனெனில் இவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவராவார்' என்று கூறினார்கள். மேலும், அவர்களுடைய ஸதகா (ஜகாத்) வந்தபோது, 'இது ஒரு கூட்டத்தாரின் ஸதகா', அல்லது 'என் கூட்டத்தாரின் ஸதகா' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2525 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الْحَارِثِ، عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ
قَالَ أَبُو هُرَيْرَةَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ مِنْ ثَلاَثٍ سَمِعْتُهُنَّ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ ‏"‏ ‏.‏
قَالَ وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هَذِهِ صَدَقَاتُ قَوْمِنَا ‏"‏ ‏.‏ قَالَ
وَكَانَتْ سَبِيَّةٌ مِنْهُمْ عِنْدَ عَائِشَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَعْتِقِيهَا فَإِنَّهَا
مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ‏"‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் பனூ தமீம் குலத்தாரை மூன்று காரணங்களுக்காக (எப்போதும்) நேசிக்கிறேன். அவற்றை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். ‘அவர்கள் என் சமுதாயத்தாரில் தஜ்ஜாலை எதிர்ப்பதில் மிகவும் கடுமையானவர்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். (ஒரு முறை) அவர்களின் ஸதகாக்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவை நம் மக்களின் ஸதகாக்கள்’ என்று கூறினார்கள். மேலும், ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்களில் ஒரு போர்க்கைதிப் பெண் இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவரை விடுதலை செய்துவிடு! ஏனெனில், இவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றலாவார்’ என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح