இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1547 mஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ، الزُّرَقِيِّ أَنَّهُ سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا أَكْثَرَ الأَنْصَارِ حَقْلاً - قَالَ - كُنَّا نُكْرِي الأَرْضَ عَلَى أَنَّ لَنَا هَذِهِ وَلَهُمْ هَذِهِ فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ هَذِهِ فَنَهَانَا عَنْ ذَلِكَ وَأَمَّا الْوَرِقُ فَلَمْ يَنْهَنَا ‏.‏
ராஃபிஃ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"நாங்கள் அன்சாரிகளிலேயே அதிகமான விவசாய நிலங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். '(நிலத்தின்) இப்பகுதி (விளைச்சல்) எங்களுக்கும், அப்பகுதி அவர்களுக்கும்' (என்று விளைச்சலைத் தனித்தனியாகப் பிரிக்கும்) நிபந்தனையின் பேரில் நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில நேரங்களில் இப்பகுதி விளைச்சலைத் தரும்; அப்பகுதி (எதையும்) விளைவிக்காது. எனவே, அவ்வாறு செய்வதை விட்டும் (நபி (ஸல்) அவர்கள்) எங்களைத் தடுத்தார்கள். ஆனால், வெள்ளி (நாணயங்களைக் கொண்டு வாடகைக்கு விடுவதை) அவர்கள் தடுக்கவில்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2458சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، قَالَ سَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ قَالَ كُنَّا نُكْرِي الأَرْضَ عَلَى أَنَّ لَكَ مَا أَخْرَجَتْ هَذِهِ وَلِي مَا أَخْرَجَتْ هَذِهِ فَنُهِينَا أَنْ نُكْرِيَهَا بِمَا أَخْرَجَتْ وَلَمْ نُنْهَ أَنْ نُكْرِيَ الأَرْضَ بِالْوَرِقِ ‏.‏
ஹன்ஃழலா பின் கைஸ் கூறினார்:
“நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள், (நிலத்தின்) இப்பகுதியில் விளைவது உனக்கு; இப்பகுதியில் விளைவது எனக்கு என்ற அடிப்படையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுபவர்களாக இருந்தோம். எனவே, (நிலத்தின் குறிப்பிட்ட) பகுதிகளில் விளைவதைக் கொண்டு (அதை ஒருவருக்கொருவர் பிரித்துக்கொள்ளும் வகையில்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கு நாங்கள் தடை செய்யப்பட்டோம். ஆனால், வெள்ளிக்காக (அதாவது, பணத்திற்காக) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கு நாங்கள் தடை செய்யப்படவில்லை.’”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)