அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஏதோ ஒரு தேவைக்காக ஹஃப்ஸா (ரழி) அவர்களின் இல்லத்தின் கூரையின் மீது ஏறினேன்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷாம் (சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன் மற்றும் லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி) பகுதியை முன்னோக்கியவர்களாகவும், கிப்லாவைத் தமது முதுகுக்குப் பின்னால் ஆக்கியவர்களாகவும் இயற்கைக்கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டின் கூரை மீது (அல்லது மேல் தளத்தில்) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும், கிப்லாவிற்கு முதுகைத் திருப்பியும் தமது (இயற்கைத்) தேவைக்காக அமர்ந்திருப்பதை நான் கண்டேன்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு நாள் நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டின் கூரை மீது ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்காக) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்கள் ஷாம் திசையை முன்னோக்கியவாறும், கஃபாவை முதுகுபுறமாக நோக்கியவாறும் இருந்தார்கள்.'