இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

308ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ، ثُمَّ تَقْتَرِصُ الدَّمَ مِنْ ثَوْبِهَا عِنْدَ طُهْرِهَا فَتَغْسِلُهُ، وَتَنْضَحُ عَلَى سَائِرِهِ، ثُمَّ تُصَلِّي فِيهِ‏.‏
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:
“எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு அவர் தூய்மையானதும், தமது ஆடையிலிருந்து இரத்தக் கறையைக் கிள்ளி நீக்கிவிட்டு, அதைக் கழுவுவார்; (மற்ற பகுதிகளில் இரத்தம் படவில்லை என்ற உறுதிக்காகவோ அல்லது சந்தேகத்தின் பேரிலோ) ஆடையின் மற்ற பகுதிகளில் தண்ணீர் தெளிப்பார். பிறகு அதில் தொழுவார்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح