ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:
“எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு அவர் தூய்மையானதும், தமது ஆடையிலிருந்து இரத்தக் கறையைக் கிள்ளி நீக்கிவிட்டு, அதைக் கழுவுவார்; (மற்ற பகுதிகளில் இரத்தம் படவில்லை என்ற உறுதிக்காகவோ அல்லது சந்தேகத்தின் பேரிலோ) ஆடையின் மற்ற பகுதிகளில் தண்ணீர் தெளிப்பார். பிறகு அதில் தொழுவார்.”