حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي صَلاَةِ الصُّبْحِ.
அப்துல்லாஹ் பின் அபீ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: என் தந்தை (ரழி) அவர்கள் கூறினார்கள், "நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் ரக்அத்தை (குர்ஆன் ஓதுவதன் மூலம்) நீட்டுவார்கள், இரண்டாவது ரக்அத்தைச் (குறைவாக ஓதி) சுருக்குவார்கள்; ஃபஜ்ர் தொழுகையிலும் அவ்வாறே செய்வார்கள்."
அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதல் இரண்டு ரக்அத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹாவையும், (அதனுடன் வேறு) இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். சில நேரங்களில் (ஓதும்) வசனத்தை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சற்று சப்தமாக) ஓதுவார்கள். மேலும், அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தை நீட்டுவார்கள்; இரண்டாவது ரக்அத்தைச் சுருக்குவார்கள். சுபுஹ் (ஃபஜ்ர்) தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்."
அபூ கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளின் முதல் இரண்டு ரக்அத்துகளில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தையும், (அதன் பிறகு) இரண்டு சூராக்களையும் (அதாவது, ஒவ்வொரு ரக்அத்திலும் ஒரு சூரா வீதம்) ஓதுவார்கள். சில சமயங்களில் ஒரு வசனத்தை எங்களுக்குக் கேட்கும்படி (சப்தமாக) ஓதுவார்கள். அவர்கள் லுஹருடைய முதல் ரக்அத்தை நீளமாக ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தைச் சுருக்குவார்கள். ஸுப்ஹு தொழுகையிலும் அவ்வாறே செய்வார்கள்.