அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓதுபவர் (இமாம், சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும்) 'ஆமீன்' என்று கூறும்போது, நீங்கள் (பின்பற்றித் தொழுபவர்கள்) 'ஆமீன்' என்று கூறுங்கள். ஏனெனில், வானவர்கள் 'ஆமீன்' கூறுகிறார்கள். எவருடைய 'ஆமீன்' வானவர்களின் 'ஆமீன்' உடன் ஒத்துப்போகிறதோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓதுபவர் (இமாம்) ஆமீன் கூறும்போது, நீங்களும் 'ஆமீன்' கூறுங்கள், ஏனெனில் வானவர்களும் ஆமீன் கூறுகிறார்கள். மேலும் ஒருவரின் ஆமீன் வானவர்களின் ஆமீனுடன் ஒத்துப்போனால், அல்லாஹ் அவருடைய முன்னர் செய்த பாவங்களை மன்னிப்பான்.'
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓதுபவர் (இமாம்) ஆமீன் சொல்லும்போது, நீங்களும் ஆமீன் சொல்லுங்கள். ஏனெனில் வானவர்களும் ஆமீன் சொல்கின்றனர். எவருடைய ஆமீன் வானவர்களின் ஆமீனுடன் ஒத்துப்போகிறதோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இமாம் 'ஆமீன்' கூறும்போது நீங்களும் 'ஆமீன்' கூறுங்கள், ஏனெனில், ஒருவரின் 'ஆமீன்' மலக்குகளின் 'ஆமீன்' உடன் ஒத்துப்போனால், அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் (தொழுகையில்) ஆமீன் கூறும்போது, நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில், ஒருவருடைய ஆமீன், வானவர்களின் ஆமீனுடன் ஒருசேர அமைந்துவிட்டால், அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.”