மாலிக் பின் அல்-ஹுவைரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தக்பீர் கூறும்பொழுதும், ருகூஃ செய்யும்பொழுதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும் பொழுதும், தமது காதுகளின் மேல்பகுதி வரை தமது கைகளை உயர்த்துவதை நான் கண்டேன்."
மாலிக் பின் அல்-ஹுவைரித் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் ருகூஃ செய்யும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும், தமது காதுகளின் மேல் பகுதிக்கு நேராக வரும் வரை கைகளை உயர்த்துவதை அவர் பார்த்தார்கள்.
மாலிக் பின் அல்-ஹுவைரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது, தங்கள் கைகளை உயர்த்தினார்கள். அவர்கள் ருகூஃ செய்யும்போது அவ்வாறே செய்தார்கள். ருகூஃவிலிருந்து தங்கள் தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே செய்தார்கள். சஜ்தாவிலிருந்து தங்கள் தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே செய்தார்கள். அதாவது, தங்கள் கைகளை உயர்த்தினார்கள்.