வாயில் இப்னு ஹுஜ்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது, தங்கள் கைகளுக்கு முன்பு தங்கள் முழங்கால்களை (தரையில்) வைப்பதையும், அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) எழும்போது, தங்கள் முழங்கால்களுக்கு முன்பு தங்கள் கைகளை உயர்த்துவதையும் நான் கண்டேன்."
வாயில் இப்னு ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது, தமது முழங்கால்களைத் தமது கைகளுக்கு முன்னர் (தரையில்) வைப்பதையும், அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) எழும்போது, தமது கைகளைத் தமது முழங்கால்களுக்கு முன்னர் உயர்த்துவதையும் நான் பார்த்தேன்.' (இமாம் அபூ அப்துர் ரஹ்மான் (நஸாயீ) கூறினார்கள்: ஷரீக் வழியாக இதை யஸீத் இப்னு ஹாறூன் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)