அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரு பாயின் மீது தொழுதுகொண்டிருந்ததை நான் கண்டேன்; அதன் மீது சஜ்தா செய்தார்கள். மேலும், அவர்கள் ஒரே ஆடையை (உடலின் மேல் பாகத்தில்) குறுக்காகப் போர்த்தியவர்களாகத் தொழுதுகொண்டிருந்ததையும் நான் கண்டேன்.