இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

355ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ‏.‏
உமர் பின் அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான், உம்மு ஸலமா (ரழி) அவர்களின் இல்லத்தில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை உடுத்தி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டிருந்த நிலையில் தொழுததை கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
356ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ‏.‏
உமர் பின் அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையைத் தம் உடலைச் சுற்றிப் போர்த்தி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களின் மீது மாற்றிப் போட்டிருந்த நிலையில் தொழுவதை நான் பார்த்தேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
517 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ ‏.‏
உமர் இப்னு அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் ஒரே ஆடை அணிந்து, அதன் இரு முனைகளையும் தம் தோள்கள் மீது போட்டிருந்த நிலையில் தொழுதுகொண்டிருந்ததை நான் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
518 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் ஆடையை அணிந்து, அதன் இரு முனைகளையும் மாற்றிப் போட்டவர்களாகத் தொழுவதைக் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
764சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ ‏.‏
உமர் இப்னு அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடை அணிந்து தொழுவதைக் கண்டார்கள். அதன் முனைகளை அவர்கள் தமது தோள்களின் மீது போட்டிருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)