அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு (சுன்னத்தான) ரக்அத்களில் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்" மற்றும் "குல் ஹுவல்லாஹு அஹத்" ஆகியவற்றை ஓதினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஃக்ரிப் தொழுகைக்குப் பின்னரான (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களிலும், ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னரான (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களிலும் {குல் யா அய்யுஹல் காஃபிரூன்} மற்றும் {குல் ஹுவல்லாஹு அஹத்} ஆகிய சூராக்களை ஓதுவதை நான் இருபது தடவைகள் உற்று நோக்கினேன்."