أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوتِرُ بِخَمْسٍ وَبِسَبْعٍ لاَ يَفْصِلُ بَيْنَهَا بِسَلاَمٍ وَلاَ بِكَلاَمٍ .
உம்மு சலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்களாக வித்ருத் தொழுவார்கள்; (அந்தத் தொழுகையின் ரக்அத்களுக்கு) இடையில் சலாம் கூறியோ அல்லது பேசியோ பிரிக்க மாட்டார்கள்."
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு அல்லது ஐந்து (ரக்அத்கள்) வித்ரு தொழுவார்கள்; அவற்றுக்கிடையே தஸ்லீம் (சலாம் கூறுதல்) கொண்டு பிரிக்க மாட்டார்கள்."