حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عُمَرَ، ح وَحَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِرَكْعَةٍ .
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இரவுத் தொழுகை) இரண்டு இரண்டு ரக்அத்களாக (தொழப்பட வேண்டும்). உங்களில் ஒருவர் சுப்ஹ் (நேரம்) வந்துவிடுமோ என்று அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் தொழுது (அதன் மூலம் தனது இரவுத் தொழுகையை) வித்ரு ஆக்கிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது இருந்தபோது, இரவுத் தொழுகையைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இரண்டு இரண்டாக (தொழ வேண்டும்). பின்னர், அதிகாலை வந்துவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால், ஒரு ரக்அத் வித்ர் தொழுங்கள்' என்று கூற நான் கேட்டேன்."