ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே ரக்அத்தில் சூரா அல்பகரா, ஆல் இம்ரான் மற்றும் அந்நிஸா ஆகியவற்றை ஓதினார்கள். மேலும், அவர்கள் அருளைப் பற்றிய வசனத்தைக் கடக்கும்போது (அந்த அருளை) அல்லாஹ்விடம் கேட்காமலும், வேதனையைப் பற்றிய வசனத்தைக் கடக்கும்போது (அந்த வேதனையிலிருந்து) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடாமலும் இருக்கவில்லை.