அப்துர்-ரஹ்மான் பின் ஷிப்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விடயங்களைத் தடை செய்தார்கள்: "காகம் கொத்துவது போல் (தொழுகையில்) கொத்துவதையும், இரைதேடும் விலங்கைப் போல் (சஜ்தாவில்) முன்கைகளைத் தரையில் விரிப்பதையும், மேலும், ஒட்டகம் தனக்கென ஒரு இடத்தைப் பழக்கப்படுத்திக்கொள்வதைப் போல், தொழுகைக்கென (மஸ்ஜிதிலோ அல்லது வீட்டிலோ) ஒரே இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதையும்."