أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَأَيْتُ الْهِلاَلَ . فَقَالَ " أَتَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . قَالَ نَعَمْ . فَنَادَى النَّبِيُّ صلى الله عليه وسلم " أَنْ صُومُوا " .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்; "ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் பிறையைப் பார்த்துவிட்டேன்' என்றார். அவர்கள், 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதருமாவார் என்றும் நீ சாட்சி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். எனவே நபி (ஸல்) அவர்கள், 'நோன்பு வையுங்கள்' என்று அறிவிப்புச் செய்தார்கள்."
"ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் இன்று இரவு பிறையைப் பார்த்தேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் நீ சாட்சி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'ஓ பிலால் (ரழி) அவர்களே, நாளை மக்கள் நோன்பு நோற்க வேண்டும் என அறிவியுங்கள்' என்றார்கள்."