حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ. قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஃபித்ரா ஸகாத்தாக ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ அளவு வாற்கோதுமை (கொடுக்குமாறு) கட்டளையிட்டார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி மேலும் கூறினார்கள்:) மக்கள் (இந்த ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழம் அல்லது வாற்கோதுமைக்கு) சமமாக இரண்டு முத் கோதுமையை (கொடுப்பதாக) ஆக்கிக்கொண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸகாத்துல் ஃபித்ராக ஒரு 'ஸாஃ' அளவு பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு 'ஸாஃ' அளவு வாற்கோதுமையையோ (கொடுக்குமாறு) கட்டளையிட்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: மக்கள் (தங்கள் காலத்தில்) அதன் சமமானதை இரண்டு 'முத்' அளவு கோதுமையாக ஆக்கிக்கொண்டனர்.