ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியர்களுக்கிடையில் (தங்கும் நேரத்தை) பங்கிட்டு, பின்னர் நீதமாக நடந்தார்கள். பிறகு அவர்கள் கூறுவார்கள்:
(யா அல்லாஹ்! இது என் கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் நான் செய்த செயலாகும். எனவே, நீயே உரிமையாளனாக இருக்கும், நான் உரிமையாளனாக இல்லாத விஷயத்தில் (என் இதயத்தின் நாட்டத்திற்காக) என்னைக் குற்றம் பிடித்துவிடாதே.)
ஹம்மாத் பின் ஸைத் இதனை முர்ஸல் வடிவத்தில் அறிவித்தார்கள்.