அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரும், தமது அண்டை வீட்டார் தம் சுவரில் உத்திரம் பதிப்பதை தடுக்க வேண்டாம்.
பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: (நபியவர்களின் இந்த கட்டளையை) நீங்கள் புறக்கணிப்பதை நான் காண்கிறேனே, இது என்ன?
அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் நிச்சயமாக இதை உங்கள் தோள்களுக்கு இடையில் எறிவேன் (இதை உங்களுக்கு அறிவிப்பேன்).