இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1977 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
بْنِ عَوْفٍ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يُحَدِّثُ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
‏ ‏ إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلاَ يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا ‏ ‏ ‏.‏ قِيلَ
لِسُفْيَانَ فَإِنَّ بَعْضَهُمْ لاَ يَرْفَعُهُ قَالَ لَكِنِّي أَرْفَعُهُ ‏.‏
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:

உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடி (துல்ஹஜ்) மாதத்தில் நுழைந்தால், அவர் தமது முடியையோ, நகங்களையோ வெட்ட வேண்டாம். சில (அறிஞர்கள்) இந்த ஹதீஸை மர்ஃபூஃ இல்லை எனக் கருதுவதாக சுஃப்யான் அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: ஆனால் நான் இதனை மர்ஃபூஃ (அதாவது, நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிப்பாளர் தொடர் சென்றடைவது) என்றே கருதுகிறேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح