கவ்லா பின்த் ஹகீம் அஸ்-சுலமிய்யா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "யாரேனும் ஒருவர் ஒரு (புதிய) இடத்தில் இறங்கி (தங்கும்போது), 'அஊது பிகலிமா தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு, அவன் படைத்தவற்றின் தீமையிலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவர் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை அவருக்கு எந்த ஒன்றும் தீங்கிழைக்காது."