அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் பாவமன்னிப்புத் தேடுவதைத் (தொடர்ந்து) கடைப்பிடிக்கிறாரோ, அவருக்கு ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் ஒரு வெளியேறும் வழியையும், ஒவ்வொரு கவலையிலிருந்தும் ஒரு நிவாரணத்தையும் அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும், அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவருக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குவான்.