அபூ மஃமர் அறிவித்தார்கள்: ஒருவர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் (ரழி) அவர்கள் அந்தப் புகழ்ந்தவர் மீது மண்ணை வாரி இறைக்க ஆரம்பித்தார்கள். மேலும், (மண்ணை இறைத்தவாறே) கூறினார்கள்: 'அதிகமாகப் புகழ்பவர்களின் (அதாவது, முகஸ்துதி செய்பவர்களின்) முகங்களில் மண்ணை வாரி இறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.'