பொருள்:
“யா அல்லாஹ்! நன்மைகள் அனைத்தையும் - அதில் (இம்மையில்) விரைந்து கிடைப்பவை மற்றும் (மறுமையில்) தாமதமாகக் கிடைப்பவை, நான் அறிந்தவை மற்றும் நான் அறியாதவை ஆகிய அனைத்தையும் - உன்னிடம் கேட்கிறேன். தீமைகள் அனைத்திலிருந்தும் - அதில் விரைந்து வருபவை மற்றும் தாமதமாக வருபவை, நான் அறிந்தவை மற்றும் நான் அறியாதவை ஆகிய அனைத்திலிருந்தும் - உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லாஹ்! உன்னுடைய அடியாரும் நபியுமானவர் (முஹம்மத் ஸல்) உன்னிடம் கேட்ட நன்மையை நானும் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமானவர் எதிலிருந்து பாதுகாப்புத் தேடினாரோ, அதிலிருந்து நானும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லாஹ்! நான் உன்னிடம் சொர்க்கத்தையும், அச்சொர்க்கத்திற்கு நெருக்கமாக்கும் சொல் அல்லது செயலையும் கேட்கிறேன். நரகத்திலிருந்தும், அந்நரகத்திற்கு நெருக்கமாக்கும் சொல் அல்லது செயலிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்கு விதித்த விதியனைத்தும் நன்மையாக அமையவேண்டுமென்று உன்னிடம் கேட்கிறேன்.”