இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

587ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، يُحَدِّثُ عَنْ مُعَاوِيَةَ، قَالَ إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً، لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا، يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ‏.‏
முஆவியா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுகிறீர்கள்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறோம். (ஆனால்) அவர்கள் அத்தொழுகையைத் தொழுவதை நாங்கள் கண்டதில்லை. மேலும், அவர்கள் அவ்விரண்டையும் (அதாவது, அஸர் தொழுகைக்குப் பிந்தைய இரண்டு ரக்அத்களை) தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح