அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அல்-அர்பஇ: மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் துஆஇன் லா யுஸ்மஉ (அல்லாஹ்வே! நான் உன்னிடம் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்: பயனளிக்காத கல்வியை விட்டும், உள்ளச்சம் கொள்ளாத உள்ளத்தை விட்டும், திருப்தியடையாத ஆன்மாவை விட்டும், பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும்.)'"