இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1939ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي،
عَنْ عَاصِمٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لاَ أَدْرِي إِنَّمَا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم مِنْ أَجْلِ أَنَّهُ كَانَ حَمُولَةَ النَّاسِ فَكَرِهَ أَنْ تَذْهَبَ حَمُولَتُهُمْ أَوْ حَرَّمَهُ فِي يَوْمِ
خَيْبَرَ لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வீட்டுக் கழுதைகள் மக்களின் சுமை சுமக்கும் பிராணிகளாக இருந்ததன் காரணத்தினாலும், அதனால் அவர் (ஸல்) அவர்கள் மக்களுடைய சுமை சுமக்கும் பிராணிகள் அழிக்கப்படுவதை விரும்பாததினாலும் (ஒரு வசதிக்காக) வீட்டுக் கழுதையின் இறைச்சியை உண்பதைத் தடைசெய்தார்களா, அல்லது அவர் (ஸல்) அவர்கள் கைபர் தினத்தன்று வீட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் பயன்படுத்துவதை (ஒரு வசதிக்காக அல்லாமல் ஷரீஅத்தின் சட்டமாக) தடைசெய்தார்களா என்பது எனக்குத் தெரியாது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح