இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5251ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالُوا حَدَّثَنَا ابْنُ،
مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ
صلى الله عليه وسلم يَلْعَقُ أَصَابِعَهُ الثَّلاَثَ مِنَ الطَّعَامِ ‏.‏ وَلَمْ يَذْكُرِ ابْنُ حَاتِمٍ الثَّلاَثَ ‏.‏ وَقَالَ
ابْنُ أَبِي شَيْبَةَ فِي رِوَايَتِهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ ‏.‏
இப்னு கஅப் பின் மாலிக் அவர்கள், தங்கள் தந்தை கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (உணவருந்தி முடித்த பின்) தங்களின் மூன்று விரல்களைச் சப்புவதைக் கண்டதாக அறிவித்தார்கள்.

இப்னு ஹாத்திம் அவர்கள் "மூன்று" என்பதைக் குறிப்பிடவில்லை.

இப்னு அபீ ஷைபா அவர்கள் தமது அறிவிப்பில், "அப்துர் ரஹ்மான் பின் கஅப் தம் தந்தையிடமிருந்து" (அறிவிப்பதாக)க் குறிப்பிட்டுள்ளார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح