அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் வேதத்தில் எந்த ஓர் அத்தியாயமும் அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் அறியாமல் இல்லை; மேலும் எந்த ஒரு வசனமும் அது எவ்விஷயத்தில் அருளப்பட்டது என்பதை நான் அறியாமல் இல்லை. அல்லாஹ்வின் வேதத்தை என்னை விட நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என்றும், ஒட்டகங்கள் அவரைச் சென்றடைய முடியும் என்றும் நான் அறிந்தால், நிச்சயமாக நான் அவரிடம் (வாகனத்தில் ஏறிச்) சென்றிருப்பேன்.