அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"இந்தக் குர்ஆன் பிரதிகளை (தொடர்ந்து) பேணி வாருங்கள் - (அல்லது 'குர்ஆனை' என்றும் அவர் கூறியிருக்கலாம்). - ஏனெனில், கால்கட்டுப் போடப்பட்ட ஒட்டகங்கள் (கட்டிலிருந்து விடுபட்டு) ஓடுவதை விட மிக வேகமாக இது (குர்ஆன்) மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து வெளியேறிவிடும்."
மேலும் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரும் 'இன்ன இன்ன வசனத்தை நான் மறந்துவிட்டேன்' என்று கூற வேண்டாம்; மாறாக அவர் மறக்கடிக்கப்பட்டுள்ளார் (அல்லது அது அவருக்கு மறக்கடிக்கப்பட்டது)."