حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الأَنْصَارِيِّ، فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ، أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَ عَاصِمٌ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ، قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا. قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ، أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَنْزَلَ اللَّهُ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا . قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، إِنْ أَمْسَكْتُهَا، فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ تِلْكَ سُنَّةُ الْمُتَلاَعِنَيْنِ.
ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உவைமிர் அல்அஜ்லானீ (ரலி), ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, "ஆஸிம் அவர்களே! ஒரு மனிதர் தம் மனைவியுடன் (அந்நிய) ஆணைக் கண்டால், அவர் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? (அப்படிக் கொன்றுவிட்டால் அதற்குப் பதிலாக) நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் என்னதான் செய்ய வேண்டும்? ஆஸிம் அவர்களே! இது குறித்து எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்" என்றார்.
ஆஸிம் (ரலி) இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். இக்கேள்விகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்; அதைக் குறை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றது ஆஸிம் (ரலி) அவர்களுக்குப் பெரும் பாரமாக இருந்தது.
ஆஸிம் (ரலி) தம் குடும்பத்தாரிடம் திரும்பியபோது உவைமிர் (ரலி) அவரிடம் வந்து, "ஆஸிம் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களிடம் என்ன கூறினார்கள்?" என்று கேட்டார். அதற்கு ஆஸிம் (ரலி), "நீ எனக்கு நன்மையைக் கொண்டு வரவில்லை. நான் கேட்ட கேள்வியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்" என்று கூறினார்.
அதற்கு உவைமிர் (ரலி), "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரிடம் இது பற்றிக் கேட்காமல் நான் ஓயமாட்டேன்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது மக்கள் மத்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
உவைமிர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் மனைவியுடன் (அந்நிய) ஆணைக் கண்டால், அவர் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? (அப்படிக் கொன்றுவிட்டால் அதற்குப் பதிலாக) நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் என்னதான் செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உனது விஷயத்திலும் உனது மனைவியின் விஷயத்திலும் (குர்ஆன் வசனங்களை) அருளியுள்ளான். ஆகவே, சென்று அவளை அழைத்து வா" என்றார்கள்.
ஸஹ்ல் (ரலி) கூறுகிறார்: "நானும் மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருக்கும்போது அவ்விருவரும் பரஸ்பரம் சாபமிட்டு (லிஆன் செய்து) கொண்டனர். (லிஆன் செய்து) முடிந்ததும் உவைமிர் (ரலி), 'அல்லாஹ்வின் தூதரே! (இனிமேலும்) இவளை நான் என் மனைவியாக வைத்துக்கொண்டால், இவள் மீது பொய்யுரைத்தவனாவேன்' என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரிந்துவிடுமாறு) கட்டளையிடுவதற்கு முன்பே அவளை மூன்று முறை தலாக் (விவாகரத்து) செய்துவிட்டார்."
இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "லிஆன் செய்துகொண்ட தம்பதியரின் வழிமுறை (சுன்னத்) அதுவாகவே ஆகிவிட்டது."
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ، السَّاعِدِيَّ أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الأَنْصَارِيِّ فَقَالَ لَهُ أَرَأَيْتَ يَا عَاصِمُ لَوْ أَنَّ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَسَلْ لِي عَنْ ذَلِكَ يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا . قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا . فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ نَزَلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا . قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا . فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ .
சஹ்ல் இப்னு சஅத் அஸ்ஸாஇதீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உவைமிர் அல்-அஜ்லானீ (ரழி) அவர்கள் ஆஸிம் இப்னு அதீ அல்-அன்ஸாரீ (ரழி) அவர்களிடம் வந்து, அவரிடம், "ஆஸிம் அவர்களே! ஒருவன் தன் மனைவியுடன் (அன்னிய) ஒரு ஆணைக் கண்டால், அவன் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? (அப்படிக் கொன்றால், பதிலுக்கு) நீங்கள் அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் என்னதான் செய்ய வேண்டும்? (எனக்குச் சொல்லுங்கள்.) ஆஸிம் அவர்களே! இதுபற்றி எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்" என்று கூறினார்.
ஆகவே, ஆஸிம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சென்று) கேட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இது போன்ற) கேள்விகளை வெறுத்தார்கள்; மேலும், அதைக் குறை கூறினார்கள். எந்தளவிற்கென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றது ஆஸிம் அவர்களுக்குப் பெரும் பாரமாக (வருத்தமாக) இருந்தது.
ஆஸிம் (ரழி) தம் குடும்பத்தினரிடம் திரும்பியபோது, உவைமிர் (ரழி) அவரிடம் வந்து, "ஆஸிம் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களிடம் என்ன கூறினார்கள்?" என்று கேட்டார். அதற்கு ஆஸிம் உவைமிர் இடம், "நீர் என்னிடம் நல்ல செய்தியைக் கொண்டுவரவில்லை; நான் கேட்ட அந்தக் கேள்வியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்" என்று கூறினார்.
அதற்கு உவைமிர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறித்து நான் அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்" என்று கூறினார். உவைமிர் (ரழி) அவர்கள், மக்கள் மத்தியில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் (அன்னிய) ஒரு ஆணைக் கண்டால், அவன் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? (அப்படிக் கொன்றால், பதிலுக்கு) நீங்கள் அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் என்னதான் செய்ய வேண்டும்?" எனக் கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னைப் பற்றியும் உன் மனைவியைப் பற்றியும் (இறைவசனம்) அருளப்பட்டுவிட்டது. ஆகவே, நீ சென்று அவளை அழைத்து வா" என்று கூறினார்கள்.
சஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "பிறகு அவ்விருவரும் 'லிஆன்' (சாபப் பிரமாணம்) செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் மக்களுடன் இருந்தேன். அவ்விருவரும் (லிஆன் செய்து) முடித்ததும், உவைமிர் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! (இதற்குப் பிறகும்) நான் அவளை (மனைவியாக) வைத்திருந்தால், அவள் மீது நான் பொய் சொன்னவனாகி விடுவேன்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவதற்கு முன்னாலேயே அவளை மூன்று தலாக் (முத்தலாக்) சொல்லி விவாகரத்துச் செய்துவிட்டார்."
இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பின்னர் இதுவே 'லிஆன்' செய்பவர்களின் (அல் முதலாஇனைன்) வழிமுறையாக (சுன்னத்) ஆனது."
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ فَقَالَ أَرَأَيْتَ يَا عَاصِمُ لَوْ أَنَّ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَيَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ . فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتَ عَنْهَا . فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَ عَنْهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ نَزَلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَائْتِ بِهَا . قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَ عُوَيْمِرٌ قَالَ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا . فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
ஸஹ்ல் பின் சஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உவைமிர் அல்-அஜ்லானீ (ரழி) அவர்கள் ஆஸிம் பின் அதிய் (ரழி) அவர்களிடம் வந்து, "ஆஸிம் அவர்களே! ஒரு மனிதர் தம் மனைவியுடன் (அன்னிய) ஆணைக் கண்டால், அவர் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? (அவ்வாறு கொன்றால், பழிக்குப்பழி வாங்கும் விதமாக) அவர்கள் இவரைக் கொன்றுவிடுவார்களே! அல்லது அவர் என்னதான் செய்வார்? இதுபற்றி எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள் ஆஸிம் அவர்களே!" என்று கூறினார்.
எனவே, ஆஸிம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சென்று) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதுபோன்ற) கேள்விகளை வெறுத்தார்கள்; மேலும், ஆஸிம் (ரழி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டது பெரும் பாரமாக (மன வருத்தமாக) அமையும் அளவுக்கு அக்கேள்விகளைக் குறை கூறினார்கள்.
ஆஸிம் (ரழி) தம் குடும்பத்தாரிடம் திரும்பியபோது, உவைமிர் (ரழி) அவரிடம் வந்து, "ஆஸிம் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களிடம் என்ன கூறினார்கள்?" என்று கேட்டார். ஆஸிம் (ரழி) உவைமிர் (ரழி) அவர்களிடம், "நீர் எனக்கு நன்மையைக் கொண்டுவரவில்லை; நீர் கேட்ட கேள்வியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்" என்று கூறினார். அதற்கு உவைமிர் (ரழி), "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதுபற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்" என்று கூறினார்.
பிறகு உவைமிர் (ரழி) புறப்பட்டு, மக்கள் மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் மனைவியுடன் (அன்னிய) ஆணைக் கண்டால், அவர் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? (அவ்வாறு கொன்றால்) அவர்கள் இவரைக் கொன்றுவிடுவார்களே! அல்லது அவர் என்னதான் செய்வார்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம் விஷயத்திலும் உமது மனைவியின் விஷயத்திலும் (இறைச்சட்டம்) அருளப்பட்டுள்ளது. எனவே நீர் சென்று அவளை அழைத்து வாரும்" என்று கூறினார்கள்.
ஸஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "பிறகு அவ்விருவரும் 'லிஆன்' (சாப சத்தியம்) செய்தார்கள். நானும் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருந்தேன். உவைமிர் (ரழி) அவர்கள் (லிஆன் செய்து) முடித்ததும், 'அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை (மனைவியாக) வைத்துக்கொண்டால், அவள் விஷயத்தில் நான் பொய்யுரைத்தவனாகி விடுவேனே!' என்று கூறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே அவளை மூன்று முறை தலாக் (விவாகரத்து) செய்துவிட்டார்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ عَاصِمِ بْنِ عَدِيٍّ، قَالَ جَاءَنِي عُوَيْمِرٌ - رَجُلٌ مِنْ بَنِي الْعَجْلاَنِ - فَقَالَ أَىْ عَاصِمُ أَرَأَيْتُمْ رَجُلاً رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ يَا عَاصِمُ سَلْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَسَأَلَ عَاصِمٌ عَنْ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَكَرِهَهَا . فَجَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ مَا صَنَعْتَ يَا عَاصِمُ فَقَالَ صَنَعْتُ أَنَّكَ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا . قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لأَسْأَلَنَّ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَانْطَلَقَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَائْتِ بِهَا . قَالَ سَهْلٌ وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ بِهَا فَتَلاَعَنَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَئِنْ أَمْسَكْتُهَا لَقَدْ كَذَبْتُ عَلَيْهَا . فَفَارَقَهَا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِفِرَاقِهَا فَصَارَتْ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ .
சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள், ஆஸிம் பின் அதீ (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் என்பவர் (என்னிடம்) வந்து, "ஆஸிமே! ஒருவன் தன் மனைவியுடன் (வேறொரு) ஆணைக் கண்டால் - அவன் அந்த ஆணைக் கொல்ல வேண்டுமா? (அப்படிக் கொன்றால், அதற்குப் பகரமாக) நீங்கள் அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் என்ன செய்ய வேண்டும்? ஆஸிமே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேளுங்கள்" என்றார்.
ஆகவே, ஆஸிம் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்கேள்விகளைக் குறை கூறினார்கள்; மேலும் அவற்றை வெறுத்தார்கள்.
பிறகு உவைமிர் அவரிடம் (ஆஸிமிடம்) வந்து, "ஆஸிமே! என்ன செய்தீர்?" என்று கேட்டார். அதற்கு ஆஸிம், "நீர் எனக்கு நல்லதொரு செய்தியைக் கொண்டுவரவில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீர் எழுப்பிய) கேள்விகளை வெறுத்தார்கள்; அவற்றைக் குறை கூறினார்கள்" என்றார்.
உவைமிர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (நேரில்) கேட்பேன்" என்று கூறினார். பிறகு அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "நிச்சயமாக அல்லாஹ், உம்மையும் உமது மனைவியையும் குறித்து (குர்ஆன் வசனங்களை) அருளியுள்ளான். எனவே அவளை அழைத்து வாரும்" என்றார்கள்.
சஹ்ல் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருந்தேன். அவர் (உவைமிர்) அவளை அழைத்து வந்தார். இருவரும் 'லிஆன்' (சாபப் பிரமாணம்) செய்தனர். பிறகு அவர் (உவைமிர்), "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! (இதற்குப் பிறகும்) நான் அவளை (மனைவியாக) வைத்துக்கொண்டால், நான் அவள் மீது பொய் சொன்னவனாவேன்" என்று கூறினார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பிரிந்து செல்லுமாறு கட்டளையிடுவதற்கு முன்பே, அவர் அவளைப் பிரிந்துவிட்டார். இதுவே 'லிஆன்' செய்பவர்களின் வழிமுறையாக (சுன்னத்) ஆகியது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرَ بْنَ أَشْقَرَ الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ . فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ لَهُ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا . فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا . فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ قُرْآنٌ فَاذْهَبْ فَأْتِ بِهَا . قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا . فَطَلَّقَهَا عُوَيْمِرٌ ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم . قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ تِلْكَ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ .
ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உவைமிர் பின் அஷ்கர் அல்அஜ்லானீ (ரழி) அவர்கள் ஆஸிம் பின் அதீ (ரழி) அவர்களிடம் வந்து, "ஆஸிமே! ஒரு மனிதர் தன் மனைவியுடன் (அந்நிய) ஆணைக் கண்டால், அவர் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? அவ்வாறு கொன்றால் (பழிக்குப் பழியாக) நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் எப்படிச் செயல்பட வேண்டும்? ஆஸிமே! இது குறித்து எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்" என்று கேட்டார்.
எனவே ஆஸிம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்கேள்விகளை வெறுத்தார்கள்; அவற்றைக் குறைகண்டார்கள். எந்தளவிற்கென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றது ஆஸிம் (ரழி) அவர்களுக்குப் பாரமாகிவிட்டது.
ஆஸிம் (ரழி) அவர்கள் தன் குடும்பத்தாரிடம் திரும்பியபோது, உவைமிர் (ரழி) அவர்கள் அவரிடம் வந்து, "ஆஸிமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன கூறினார்கள்?" என்று கேட்டார். அதற்கு ஆஸிம் (ரழி) அவர்கள், "நீர் எனக்கு நன்மையைக் கொண்டுவரவில்லை (அதாவது, நல்ல செய்தியைக் கொண்டுவரவில்லை); நான் கேட்ட கேள்வியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்" என்று கூறினார்.
அதற்கு உவைமிர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறித்து நான் அவரிடம் கேட்காமல் ஓயமாட்டேன்" என்று கூறினார். பிறகு உவைமிர் (ரழி) அவர்கள் புறப்பட்டு, மக்கள் மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தன் மனைவியுடன் (அந்நிய) ஆணைக் கண்டால், அவர் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? அவ்வாறு கொன்றால் (பழிக்குப் பழியாக) நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் எப்படிச் செயல்பட வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம் விஷயத்திலும் உமது மனைவியின் விஷயத்திலும் குர்ஆன் (வசனம்) அருளப்பட்டுள்ளது. எனவே நீர் சென்று அவளை அழைத்து வாரும்" என்று கூறினார்கள்.
ஸஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அவ்விருவரும் 'லிஆன்' (சாபப் பிரமாணம்) செய்துகொண்டார்கள். அப்போது நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களருகே இருந்தேன். அவர்கள் (லிஆனை) முடித்தபோது, உவைமிர் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (இதற்குப் பிறகும்) நான் அவளை (மனைவியாக) வைத்துக்கொண்டால் அவள் மீது நான் பொய் சொன்னவனாகி விடுவேன்' என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே அவளை முத்தலாக் சொல்லி (மூன்று தலாக் கூறி, விவாகரத்துச் செய்து) விட்டார்."
இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள், "பின்னர் இதுவே லிஆன் செய்பவர்களுக்கான வழிமுறையாக (சுன்னத்) ஆகிவிட்டது" என்று கூறினார்கள்.
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الأَنْصَارِيِّ فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا . فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا . فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسْطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا . قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا مِنْ تَلاَعُنِهِمَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا . فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ . وَقَالَ مَالِكٌ قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ تِلْكَ بَعْدُ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ .
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
உவைமிர் அல்-அஜ்லானீ (ரழி) அவர்கள், ஆஸிம் இப்னு அதீ அல்-அன்சாரீ (ரழி) அவர்களிடம் வந்து, "ஆஸிம் அவர்களே! ஒருவன் தன் மனைவியுடன் (அன்னிய) ஆணைக் கண்டால் (விஷயத்தில்) தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவன் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? அவ்வாறு (கொன்று) விட்டால் (பதிலுக்கு) நீங்கள் அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் என்னதான் செய்ய வேண்டும்? ஆஸிம் அவர்களே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேளுங்கள்" என்று கூறினார்கள்.
ஆகவே, ஆஸிம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை வெறுத்தார்கள்; மேலும் அதைக் குறை கூறினார்கள். ஆஸிம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றது அவர்களுக்குப் பாரமாகத் தெரியும் அளவுக்கு (நபி (ஸல்) அவர்களின் வெறுப்பு இருந்தது).
ஆஸிம் (ரழி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம் திரும்பியபோது, உவைமிர் (ரழி) அவர்கள் அவரிடம் வந்து, "ஆஸிம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன கூறினார்கள்?" என்று கேட்டார்கள். ஆஸிம் (ரழி) அவர்கள் உவைமிர் (ரழி) அவர்களிடம், "நீர் எனக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. நான் கேட்ட கேள்வியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு உவைமிர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்கும் வரை ஓயமாட்டேன்!" என்று கூறினார்கள். பிறகு உவைமிர் (ரழி) அவர்கள் புறப்பட்டு, மக்கள் மத்தியில் (அமர்ந்திருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் (வேறொரு) ஆணைக் கண்டால் அவன் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்? அவன் அவனைக் கொன்றுவிட வேண்டுமா? அவ்வாறு (கொன்று) விட்டால் (பதிலுக்கு) நீங்கள் அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் என்னதான் செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னையும் உன் மனைவியையும் குறித்து (குர்ஆன் வசனம்) அருளப்பட்டுள்ளது; எனவே சென்று அவளை அழைத்து வா" என்று கூறினார்கள்.
ஸஹ்ல் (ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்: "பிறகு அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் 'லிகான்' (சாபப் பிரமாணம்) செய்துகொண்டார்கள். அப்போது நானும் மக்களுடன் அங்கிருந்தேன். அவர்கள் இருவரும் சாபப் பிரமாணத்தை முடித்தபோது, உவைமிர் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (இதற்குப் பிறகும்) நான் அவளை (மனைவியாக) வைத்துக்கொண்டால், அவள் மீது நான் பொய் கூறியவனாகிவிடுவேன்' என்று கூறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவதற்கு முன்பே அவளை மூன்று முறை (முத்)தலாக் சொன்னார்."
இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "லிகான் செய்யும் தம்பதியருக்கான வழிமுறையாக (சுன்னத்) இதுவே ஆகிவிட்டது."