"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டின் தோள்பட்டைப் பகுதியிலிருந்து (இறைச்சியை) அரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் கத்தியைக் கீழே வைத்துவிட்டு, உளூவை மீண்டும் செய்யாமலேயே தொழுதார்கள்."
அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆட்டின்) தோள்பட்டை இறைச்சியை (கத்தியால்) அரிந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் எழுந்து, கத்தியைக் கீழே போட்டுவிட்டுத் தொழுதார்கள்; (இதற்காக) அவர்கள் உளூச் செய்யவில்லை."
அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (ஆட்டின்) புஜக்கறியை அதிலிருந்து வெட்டிச் சாப்பிடுவதை நான் கண்டேன். பிறகு அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் தங்களின் உளூவை மீண்டும் செய்யாமலேயே தொழுதார்கள்.
அஸ்-ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் கத்தியைக் கீழே வைத்தார்கள்" என்பது கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் ஆட்டு இறைச்சியின் புயப்பகுதியைத் தம் கையில் வைத்து வெட்டிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் அதையும், தாம் வெட்டிக் கொண்டிருந்த கத்தியையும் கீழே போட்டுவிட்டு, பின்னர் எழுந்து தொழுதார்கள். அவர்கள் (இதற்காகப் புதிதாக) உளூச் செய்யவில்லை.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் கையில் ஏந்தியிருந்த ஆட்டின் தோள்பட்டை இறைச்சியிலிருந்து ஒரு துண்டை வெட்டிக்கொண்டிருந்ததை தாம் கண்டார்கள். அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டபோது, அ(ந்த இறைச்சித் துண்டான)தையும், தாம் வெட்டிக்கொண்டிருந்த கத்தியையும் கீழே வைத்தார்கள். பின்னர், அவர்கள் எழுந்து நின்று, புதிதாக உளூச் செய்யாமல் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَزُّ مِنْ كَتِفٍ يَأْكُلُ مِنْهَا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ .
அம்ர் இப்னு உமைய்யா அழ்-ழமரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் தோள்பட்டையிலிருந்து (இறைச்சியை) அரிந்து கொண்டிருப்பதையும், அதிலிருந்து சாப்பிடுவதையும் கண்டேன். பிறகு அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே தொழுகையை நிறைவேற்றினார்கள்.
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَقَامَ وَطَرَحَ السِّكِّينَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ . قَالَ ابْنُ شِهَابٍ وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ .
அம்ர் பின் உமய்யா அள்-ளமரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆட்டின் தோள்பட்டையிலிருந்து (இறைச்சியை) அறிந்துகொண்டிருப்பதை நான் கண்டேன். அதிலிருந்து அவர்கள் சாப்பிட்டார்கள். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் எழுந்து, கத்தியைக் கீழே வைத்துவிட்டு, (மீண்டும்) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்."