حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنْ كَانَ فِي شَىْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ ـ أَوْ يَكُونُ فِي شَىْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ ـ خَيْرٌ فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ تُوَافِقُ الدَّاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "உங்கள் மருந்துகளில் ஏதேனும் நிவாரணம் இருந்தால், அது இரத்த உறிஞ்சி எடுப்பதில், ஒரு மிடறு தேனில், அல்லது நோய்க்குப் பொருத்தமான நெருப்பினால் சூடு போடுவதில் இருக்கிறது. ஆனால், நான் (நெருப்பினால்) சூடுபோட்டுக் கொள்வதை விரும்புவதில்லை."
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் மருந்துகளில் ஏதேனும் நிவாரணம் இருந்தால் அது இரத்த உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை (ஹிஜாமா) ஆகும், அல்லது சூடு போடுதல் ஆகும், ஆனால் நான் சூடு போட்டுக்கொள்வதை விரும்பவில்லை."