حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عُتْبَةُ بْنُ مُسْلِمٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரேனும் ஒருவரின் பானத்தில் வீட்டு ஈ விழுந்துவிட்டால், அவர் அதனை (அதில்) முழுவதுமாக மூழ்கடித்து, பின்னர் வெளியே எடுத்துவிடட்டும். ஏனெனில், அதன் ஓர் இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் அதற்கான பரிகாரமும் இருக்கின்றன."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் ஈ விழுந்தால், அவர் அதனை முழுவதுமாக மூழ்கடிக்கட்டும், ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. அது நிவாரணம் உள்ள தனது இறக்கையை பாதுகாக்கிறது, எனவே அதனை முழுவதுமாக (அப்பாத்திரத்தில்) மூழ்கடிக்கட்டும்.
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِكُمْ فَلْيَغْمِسْهُ فِيهِ ثُمَّ لْيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الآخَرِ شِفَاءً .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“உங்கள் பானத்தில் ஈ விழுந்தால், அதை அதனுள் முழுவதுமாக அமிழ்த்திவிட்டு, பிறகு வெளியே எறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றைய இறக்கையில் நிவாரணமும் இருக்கிறது.”