இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

375ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ فَصَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ وَقَالَ ‏ ‏ لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ ‏ ‏‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பட்டு ஃபர்ரூஜ் ?? அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை அணிந்து தொழுதார்கள். அவர்கள் தங்களின் தொழுகையை முடித்ததும், அதை மிகுந்த வெறுப்புடன் வன்மையாகக் கழற்றிவிட்டு, "இது அல்லாஹ்வை அஞ்சும் இறையச்சமுடையவர்களின் ஆடை அல்ல" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2075 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ ثُمَّ صَلَّى فِيهِ ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ ثُمَّ قَالَ ‏ ‏ لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ ‏ ‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு பட்டு அங்கி அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அவர்கள் அதை அணிந்து அதில் தொழுகையை நிறைவேற்றினார்கள், பின்னர் திரும்பி வந்து, அதை அவர்கள் வெறுத்தது போல் மிக வன்மையாக கழற்றி எறிந்தார்கள்.

பின்னர் அவர்கள் கூறினார்கள்: இது இறையச்சமுடையவர்களுக்கு தகுதியானதல்ல.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
770சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، وَعِيسَى بْنُ حَمَّادٍ، زُغْبَةُ عَنِ اللَّيْثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ ثُمَّ صَلَّى فِيهِ ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ ثُمَّ قَالَ ‏ ‏ لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ ‏ ‏ ‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பட்டினாலான ஃபர்ரூஜ் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்துகொண்டு அதில் தொழுதார்கள். பிறகு, தொழுகையை முடித்ததும், அதை அவர்கள் வெறுப்பதைப் போல வேகமாக கழற்றி எறிந்தார்கள். மேலும், 'இது தக்வா உள்ளவர்களுக்குத் தகுதியானதல்ல' என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)